உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன் றான மாயாவதியின் பகு ஜன் சமாஜ் கட்சி மோடி அரசை வீழ்த்துவதாக அடிக்கடி வீரவசனங் களை அள்ளி வீசினாலும், வர விருக்கும் மக்களவைத் தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் சேராமல் தனித்து தேர்தலை சந்திக்கவுள் ளது. பாஜக எதிர்ப்பாளர்கள் அனை வரும் ஒன்றாக இருக்கும்போது, நீங்கள் மட்டும் தனித்து போட்டியிடு கிறீர்கள், “இந்தியா” கூட்டணிக்கு வாருங்கள் என காங்கிரஸ், சமாஜ் வாதி, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பலமுறை அழைப்பு விடுத் தன. ஆனால் மாயாவதி அதை நிரா கரித்துவிட்டார்.
பகுஜன் சமாஜ் மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பு
நாம் தனித்து போட்டியிட்டால் எதிரிக்கட்சிகளின் வாக்குகள் பிரி யும். இதனால் பாஜகவிற்கு சாதக மான சூழல் ஏற்படும் என பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் களான ஷ்யாம் சிங் யாதவ், டேனிஷ் அலி உள்ளிட்டோர் மாயாவதியிடம் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. ஆனால் மாயாவதி மூத்த தலை வர்களின் கோரிக்கையை நிராகரிக்கவே, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷ்யாம் சிங் யாதவ் எம்.பி., காங்கிரஸ் கட்சியில் இணை யவுள்ளதாக தகவல் வெளியா னது.
இந்நிலையில், ஷ்யாம் சிங் யாதவ் தனது ஆதரவாளர்கள், தொண்டர்கள் படை சூழ ஞாயி றன்று ராகுல் காந்தியின் “இந்திய ஒற்றுமைக்கான நீதி யாத்திரை யில்” கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஷ்யாம் சிங்கை போலவே பகுஜன் சமா ஜின் பல்வேறு முக்கிய தலைவர் கள் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாக தக வல் வெளியாகியுள்ளது.
ரித்தேஷ் பாண்டே பாஜகவிற்கு ஓட்டம்
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், அம்பேத்கர் நகர் தொகு தியின் எம்பியுமான ரித்தேஷ் பாண்டே கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலை யில், ஞாயிறன்று (தில்லியில்) பாஜகவில் இணைந்தார்.